Home Page
About Me
- SNP Wealth Management
- We will help you to find suitable investment methods to achieve your goals (short term / long term) in efficient way. We will provide all type of Mutual Fund investments (Debt Fund, Gold Fund, ELSS Fund, RGESS Fund, Equity Fund and Balanced Funds). To know more about Mutual Funds / Your Investments contact us today. We are very happy to assist you.
Sunday 29 December 2019
Sunday 1 December 2019
செய்தி: நீண்ட கால நோக்கில் பலன் அளிக்கும் எஸ்.ஐ.பி.,
சம பங்கு மியூச்சுவல் பண்ட்களில், எஸ்.ஐ.பி., முறையில் செய்யப்படும் முதலீடு, நீண்ட கால நோக்கில் நல்ல பலன் அளிப்பதாக, ‘கிரிசில்’ அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.


பொதுவாகவே, நிதி உலகில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. பங்கு முதலீடு போன்றவை நீண்ட கால அடிப்படையில் அதிக பலன் தர வல்லவை.மியூச்சுவல் பண்ட் முதலீடு இதற்கு ஏற்றதாக அமைகிறது. சம பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில், எஸ்.ஐ.பி., எனும் சீரான முதலீடு முறையில் முதலீடு செய்யலாம்.
சம பங்கு மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பலனுக்கு உறுதி அளிக்க முடியாது என்றாலும், நீண்ட கால நோக்கில் இவை நல்ல பலன் அளித்திருப்பதாக, ‘கிரிசில்’ அமைப்பு ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த, 15 ஆண்டுகளுக்கான, சம பங்கு நிதிகளுக்கான செயல்பாடு குறியீடு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, எஸ்.ஐ.பி., முதலீட்டில் காலம் அதிகரிக்கும் போது, எதிர்மறை பலன் வருவதற்கான வாய்ப்பு குறைவது தெரியவந்துள்ளது.மேலும், காலம் அதிகரிக்கும் போது,குறைந்த மற்றும் அதிக பட்ச பலனுக்கான இடைவெளியும் குறைந்துஉள்ளது.மேலும், முதலீடு காலம் அதிகமாக இருக்கும் போது, அதனால் உண்டாகும் செல்வ வளமும்அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.
Friday 8 November 2019
செய்தி: மியூச்சுவல் பண்டு முதலீடு 7.4 சதவீதம் அதிகரிப்பு
புதுடில்லி:மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்துக்களின் மதிப்பு, கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில், 26.33 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, இதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது, 7.4 சதவீதம் அதிகமாகும். இதற்கு, பங்கு மற்றும் கடன் திட்டங்களில் முதலீட்டு வரத்து அதிகரித்தது காரணமாகும்.இது குறித்து, இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான, ஆம்பி தெரிவித்துள்ளதாவது:
மொத்தம் உள்ள, 44 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், செப்டம்பர் மாதத்தில் நிர்வகித்த சொத்துக்களின் மதிப்பு, 24.5 லட்சம் கோடி ரூபாயாகும்.கடந்த அக்டோபரில் மொத்தம், 1.33 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில், 1.52 லட்சம் கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் கடன் திட்டங்களில், 93 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகள், சந்தை உயர வழிவகுத்தது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் மெல்ல முதலீடு செய்வதை நோக்கி திரும்புகிறார்கள்.இவ்வாறு, ஆம்பி தெரிவித்துள்ளது.
மொத்தம் உள்ள, 44 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், செப்டம்பர் மாதத்தில் நிர்வகித்த சொத்துக்களின் மதிப்பு, 24.5 லட்சம் கோடி ரூபாயாகும்.கடந்த அக்டோபரில் மொத்தம், 1.33 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில், 1.52 லட்சம் கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் கடன் திட்டங்களில், 93 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகள், சந்தை உயர வழிவகுத்தது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் மெல்ல முதலீடு செய்வதை நோக்கி திரும்புகிறார்கள்.இவ்வாறு, ஆம்பி தெரிவித்துள்ளது.
தகவல் ஆதாரம்: https://business.dinamalar.com/news_details.asp?News_id=45790&cat=5
Sunday 21 July 2019
Sunday 7 July 2019
Sunday 30 June 2019
Monday 17 June 2019
Wednesday 27 March 2019
Friday 22 March 2019
Subscribe to:
Posts (Atom)